search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை போராட்டம்"

    • கல்லூரியில் சரிவர பாடம் நடத்துவதில்லை.
    • ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் ஜெப கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர்.

    சேலம்:

    சேலம் 5 ரோட்டில் தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரி செயல்பட்டு வந்தது. இங்கு படித்த திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த 7 மாணவிகள், கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தனர். அந்த புகாரில், கல்லூரியில் சரிவர பாடம் நடத்துவதில்லை. ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் ஜெப கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர். தவறினால் ரூ.200 அபராதம் செலுத்த நெருக்கடி தருகின்றனர். எனவே இந்த கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாததால் சான்றிதழ்களை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

    அதே நேரம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் கல்லூரி முன் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மேற்கு தாசில்தார் தமிழரசி தலை மையில் ஆர். ஐ கோமதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கல்லூரி யில் விசாரணை நடத்தினார்.

    அப்போது எந்த ஆவண மும் இல்லாமலும் முறையாக அனுமதி பெறாமலும் அந்த கல்லூரி செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரியில் பயின்று வந்த 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் மீட்கப்பட்டனர். அதில் 18 வயதுக்கு உட்பட்ட 15 பேர், சைல்ட் லைன் அமைப்பில் தங்க வைக்கப்பட்டனர். இதர மாணவிகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்பு மாலையில் கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கல்லூரி மீது சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
    • குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

    பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட துணைத் தலைவர் வினோத் ராஜ், செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் நிர்வாகம் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

    • பட்டியந்தல் கிராமத்தில் மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்
    • தாசில்தார் சமரசம்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பட்டியந்தல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 30-க்கு மேற்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினர் கடந்த வாரம் அகற்றினர்.

    மேலும் அவர்களுக்கு மாக அருகே உள்ள மட்டவெட்டு கிராமத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

    ஆனால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பட்டியந்தல் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வீரளூர் கிராமத்திலோ வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கலசபாக்கம் தாசில்தார் அவர்களிடம் சமரசம் செய்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். அதன் பிறகு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துவிட்டு சென்றனர்.

    • முல்லை பெரியாறு அணை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க கோரி தமிழக -கேரள எல்லைகளான லோயர் கேம்ப், கம்ப ம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணை பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக-கேரள எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் தெரிவித்து ள்ளார். இதுபற்றி தமிழக, கேரள முதல்-அமைச்ச ர்களுக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் ெதரிவித்துள்ள தாவது:

    முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்துள்ளது. கடந்த 5ம் தேதி இடுக்கி அணைக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் செல்லும் பகுதி தோணி ஆறு என்றும், குளமாவு அணையிலிருந்து தண்ணீர் செல்லும் பகுதி குளமாவு ஆறு என்றும் அழைக்கப்பட வேண்டும்.

    அதைவிடுத்து பெரியாறு என்று அழைப்பது கேரள மக்களிடம் முல்லைப் பெரியாற்றை பற்றி அச்சம் கொள்ளச் செய்யும் பிரசாரம் ஆகும்.

    மேலும் பேரிடர் முகாம்களையும் அமைத்து மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதை கேரள தொலைக்காட்சி களும், ஊடகங்களும் அணை உடையும் அபாயம் என அவதூறு பரப்பி வருகின்றனர். அணை இடிவதுபோல் வீடியோ பாடல் சமூக வலைதள ங்களில் பதிவேற்றம் செய்து மக்களை அச்சப்பட வைக்கின்றனர்.

    இந்நிலையை கேரள முதல்-அமைச்சர் தடுக்க வேண்டும். கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

    இதை வலியுறுத்தி தமிழக -கேரள எல்லைகளான லோயர் கேம்ப், கம்ப ம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் 2 பெண்கள் உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எஸ்.என்.எல் மற்றும் தபால் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் இளையராஜா, நகர தலைவர் குமார், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் மந்தைவெளியில் இருந்து 50 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சிலிண்டருக்கு பாடைகட்டி தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம், குறைத்திடு குறைத்திடு பெட்ரோல், டீசல், சிலிண்டர் மறறும் விலைவாசி உயர்வை குறைத்திடு, போடாதே, போடாதே, காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாவட்டத் தலைவர் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 53 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • திருச்சி மத்திய சிறை முன்பு இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
    • 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையை உடனடியாக இழுத்து மூட வேண்டும், 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தில் தீக்குளித்த ஈழத் தமிழர் உமாரமணன் என்பவருக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும்.

    தமிழ்நாட்டை நம்பி வந்த தொப்புள் கொடி உறவுகள் மீதான அடக்குமுறையை நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷரீப், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் போது இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருச்சி மத்திய சிறை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 64 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    • அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்
    • போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், குட்டத்துப்பட்டி அருகில் உள்ள புளியராஜக்காபட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, கழிவு நீர் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    நாளை இப்பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக சாக்கடை கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி தருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இன்று வரை எந்தவித பணிகளும் நடக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து ஊராட்சி தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் வெளியூரில் வசிப்பதாக கூறி உள்ளார். இருந்தபோதும் பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெளியூரில் இருப்பதாக கூறிய ஊராட்சி தலைவர் அங்கு வந்ததால் பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பான சூழல் உருவானது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து போராட்டத்தை கைவி–டுமாறு அறிவுறுத்தினர்.

    செந்துறை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2-வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்திய பெண்கள் போலீசார் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் கடந்த பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அந்த கடையை மூடிய டாஸ்மாக் நிர்வாகம் பொன்குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலப்பகுதியில் புதிய கடை திறக்க முயற்சி செய்தது. அதனை அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தி மூடினார்கள். அந்த போராட்டத்தை தொடர்ந்து அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் அப்போது மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென டாஸ்மாக் கடை முன்பு திரண்டு அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், செந்துறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நேற்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் 3 மாதத்தில் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார். ஆனால் போராட்டக்காரர்கள் 10 நாட்களுக்குள் மூட வேண்டும் என்று கூறி வெளியேறினர். பின்னர் அங்கிருந்து டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சில பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் காலில் விழுந்து இந்த கடையை உடனடியாக மூடுங்கள் என்றனர். இதையடுத்து விரைவில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    ×